Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பூர் மாநகர முதல் பெண் காவல் ஆணையாளராக வனிதா ஐபிஎஸ் பொறுப்பேற்றார்

ஜுன் 05, 2021 08:24

திருப்பூர்: திருப்பூர் மாநகர காவல் ஆணையாளராக இருந்த கார்த்திகேயன் சீருடை பணியாளர் தேர்வாணையம் ஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். 

திருப்பூர் மாநகர காவல் ஆணையாளராக சென்னை ரயில்வே ஐஜி ஆக இருந்த  வி.வனிதா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து இன்று திருப்பூர் வந்த வனிதா மாநகர காவல் ஆணையாளராக பொறுப்பேற்றார். 

அவருக்கு மாநகர போலீசார் அணிவகுப்பு மரியாதை செய்து வரவேற்றனர்.  திருப்பூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் தற்போது தான் முதல் முறையாக திருப்பூர் மாநகருக்கு பெண் ஆணையாளர் ஒருவர்  நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்