Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பூர்: முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கருவம்பாளையம் பகுதி 42 43 வது வட்ட கழக சார்பாக சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பு குழு தம்பி வெங்கடாசலம் ஏற்பாட்டில் 200க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி. நாகராஜ், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தினேஷ்குமார், பொறுப்பாளர் திலக், மங்கோ பழனிச்சாமி, சிட்டி கணேஷ் மற்றும் பல மாவட்ட மாநகர நிர்வாகிகள் உடன்பிறப்புகள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர், அனைவருக்கும் மூலிகை ரசம் வழங்கப்பட்டது,