Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாக்களிக்காமல் மை மட்டும் வைத்துகொண்ட பிரபல நடிகர்

ஏப்ரல் 23, 2019 10:26

சென்னை: கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் காலை சென்னை  வளசரவாக்கத்தில் உள்ள பள்ளியில் வாக்களிக்க வந்திருந்தார்.  அந்த வாக்குச் சாவடியில் அவரது மனைவிக்கு மட்டும் தான் ஓட்டு இருந்தது. சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்பட்டிருந்தது. இதனால் வாக்களிக்காமல் சென்று விட்டார்.    
 
பின்னர் சிவகார்த்தியனும் அவரது  மனைவி ஆர்த்தியும் மீண்டும்  வாக்குச்சாவடிக்கு வந்து தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்தல் அலுவலர், தங்களது மேலதிகாரிக்கு இந்த தகவல் தந்ததும், டி.ஆர்.ஓ. அந்தஸ்திலுள்ள அந்த மேலதிகாரி, பூத் அலுவலர்கள் மூலமாக பூத்திலிருந்த அரசியல் கட்சிகளின் முகவர்களிடம் பேசி, அவர்களை சமாதானப்படுத்தி,  சிவகார்த்திகேயன் சேலஞ்ச் ஓட்டு போட அனுமதி பெற்றிருக்கிறார்.  இதனை தொடர்ந்து, வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டார் சிவகார்த்திக்கேயன்.  
 
இதைபோன்றே நடிகர் ஸ்ரீகாந்தின் பெயரும் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருந்தது. ஆனால், இறுதியில் அவரும் வாக்குச் செலுத்திவிட்டதுபோல விரலில் மை வைத்து போஸ் கொடுத்திருந்தார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் கூறுகையில், “நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களிக்கவில்லை; அவருடைய விரலில் மை மட்டும்தான் வைத்துள்ளனர்” என்றார். 

 

தலைப்புச்செய்திகள்