Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பூரில் பனியன் நிறுவனங்களுக்கு சீல்

ஜுன் 06, 2021 05:18

திருப்பூர்: திருப்பூரில் முழு ஊரடங்கு அமலில்  உள்ள நிலையில் சில பனியன் நிறுவனங்கள் தடையை மீறி இயங்கி வருவதாக  அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து திருப்பூர் ஆர்.டி.ஓ. ஜெகநாதன் தலைமையில் தெற்கு தாசில்தார் சுந்தரம் மற்றும் குழுவினர் இடுவம்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனம் விதிகளை மீறி இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்து அந்த நிறுவனத்திற்கு  சீல் வைக்கப்பட்டது.

இதேப்போல் பாரப்பாளையம் செல்லம் நகர் பிரிவு பகுதியில் பனியன் நிறுவனம் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டு அந்த நிறுவனத்திற்கும் சீல் வைக்கப்பட்டது.மேலும் செட்டிப்பாளையம், கொங்கு மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் இயங்கிய 2 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. 4 நிறுவனங் களுக்கும் தலா ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
 

தலைப்புச்செய்திகள்