![](admin/uploads/.5fa3916027caf4.71201702.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக கோபாலன் என்பவர் பணியாற்றி வந்தார். இவரது மகன் சரவணன் (வயது 24). இந்தநிலையில் கோபாலன், அவரது மனைவி, மகன் ஆகிய 3 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்தநிலையில் கடந்த வாரம் மனைவி குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் மகன் சரவணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த கோபாலும் சிகிச்சை பலனின்றி இறந்தார். சப்-இன்ஸ்பெக்டரும், அவரது மகனும் கொரோனா தொற்றால் உயிரிழந்தது காவல் துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.