Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பசும்பொன் பக்தர்கள் பேரவை சார்பாக பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது

ஜுன் 06, 2021 07:23

திருப்பூர்: திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கு 500 சிக்கன் பிரியாணி பசும்பொன் பக்தர்கள் பேரவை சார்பாக வழங்கப்பட்டது.

மாநில பொதுச்செயலாளர் சுடலைமுத்து தலைமையிலும்,  நிறுவனர் ராயல் எம் பி லட்சுமணன் முன்னிலையிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  மாநிலத் தலைவர் குட்டி எ செல்லத்துரை, மேற்கு மண்டல செயலாளர் ஈஸ்வர பாண்டி, மாநில இளைஞரணி செயலாளர் இசக்கிமுத்து, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சுடலை, திருப்பூர் மாவட்ட இளைஞரணி தலைவர் அய்யப்பன், மாநகர மாவட்ட செயலாளர் ராகவகுமார்,  திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆனந்த், திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வடிவேலு, மாவட்ட அமைப்பாளர் தினேஷ் சதீஷ் , உதயா, அழகேசன் ,ஜான்சன் மற்றும் மாவட்ட & ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
 

தலைப்புச்செய்திகள்