Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேதாரண்யம் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சி விற்ற முதியவர் கைது

ஜுன் 09, 2021 06:08

வேதாரண்யம்: வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் கத்தரிப்புலம் கிராமம், கோயில் குத்தகை வடக்கு பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் உள்ள ராம்சிங் (வயது 54). என்பவர் வீட்டில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகவும், வீட்டு அருகிலேயே ஊறல் போட்டு வைத்திருப்பதாகவும் கிடைத்த தகவலின் பேரில் அந்த இடத்திற்கு போலீசார் சென்றனர்.

அப்போது ராம்சிங் தப்பி ஓடிவிட்டார். சோதனையில் வீட்டில் வைத்திருந்த ஒரு லிட்டர் எரிசாராயம் மற்றும் வீட்டருகே 2 கேன்களில் ஊறல் பதுக்கி வைத்திருந்ததை கைப்பற்றி அழித்தனர். ராம்சிங் மீது வழக்குப்பதிவு செய்து அவரையும் கைது செய்தனர்.

தலைப்புச்செய்திகள்