Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த தாய் போக்சோ சட்டத்தில் கைது

ஜுன் 12, 2021 05:32

ஈரோடு:  ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 26). கூலித்தொழிலாளி. சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் கனகராஜின் உறவினர் ஆவார்.

இந்த நிலையில் கனகராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமியின் பெற்றோரிடம் சென்று, அவரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு சிறுமியின் தந்தை மறுத்துவிட்டார். தாய் சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும் சிறுமியை கடந்த 17-ந் தேதி கனகராஜிக்கு கட்டாய திருமணம் செய்து கொடுத்து உள்ளார்.

இதுகுறித்து சிறுமி காவலன் செயலி மூலம் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகனுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவரது உத்தரவின் பேரில் பவானி அனைத்து மகளிர் போலீசார் சிறுமியின் தாய் மற்றும் கனகராஜ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் கனகராஜ் கோபி மாவட்ட சிறைச்சாலையிலும், சிறுமியின் தாய் கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

தலைப்புச்செய்திகள்