Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அ.ம.மு.க., முக்கிய நிர்வாகிகள் தி.மு.க.,வில் ஐக்கியமாக முடிவு?

ஏப்ரல் 24, 2019 06:06

தேர்தல் ஆணையத்தில், தனிக் கட்சியாக, அ.ம.மு.க.,வை பதிவு செய்துள்ளதால், அக்கட்சியில், அதிருப்தியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பலரும், தி.மு.க.,வில் ஐக்கியமாக முடிவு செய்துள்ளனர்.இதுகுறித்து, அ.ம.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:அ.தி.மு.க.,வை கைப்பற்ற, சட்ட போராட்டம் தொடரும் என்றும், அதுவரை, அ.ம.மு.க., என்ற கட்சியை துவக்குவதாகவும், ஆதரவாளர்களிடம் தினகரன் தெரிவித்தார்.இதனால், சசிகலா குடும்பத்தினரால், அ.தி.மு.க.,வில், கட்சி மற்றும் ஆட்சி பதவிகளை பெற்றவர்கள், தினகரன் அணியில் இருந்தனர்.விரைவில், அ.தி.மு.க., - அ.ம.மு.க., இணைந்து விடும் என்ற, நம்பிக்கையில் இருந்தனர். கட்சி நிர்வாகிகளை, தொடர்ந்து செலவு செய்ய வலியுறுத்தியது, தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி வந்தது உள்ளிட்ட காரணங்களால், அ.ம.மு.க.,வில் இருந்த பலரும், தினகரன் மேல் அதிருப்தி அடைந்தனர். 

இதையடுத்து, உச்சகட்ட அதிருப்தியில் இருந்த, முக்கிய நிர்வாகிகளான, முன்னாள், எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்பாலாஜி, கலைராஜன் ஆகியோர், தி.மு.க.,வில் இணைந்தனர். இந்த சூழலில், லோக்சபா தேர்தல் முடிந்த உடனே, தினகரன், அ.ம.மு.க.,வின் பொதுச்செயலராக பொறுப்பேற்றார். மேலும், கட்சியை, தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்தார்.தேர்தல் பிரசாரத்தின் போது, பேனர், போஸ்டர்களில், ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை விட, தனக்கு முக்கியத்துவம் அளிக்க, கட்சியினரை வற்புறுத்தினார்.இதனால், அக்கட்சியின் மாவட்ட செயலர்கள், மாநில நிர்வாகிகள் பலரும், தினகரன் மீது, கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள், தி.மு.க.,வில் இணைய முடிவு செய்து உள்ளனர்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறிகிறனர். 

தலைப்புச்செய்திகள்