Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுச்சேரி: புதுச்சேரி மாநில பாட்டாளி மக்கள் கட்சியின் நகர்புற நிர்வாகி கதிர்வேல் அவர்கள் சமீபத்தில் கொரோனாவால் உயிரிழந்தார்.
இதனையடுத்து குடும்பத்திற்க்கு ரூ.50000 அவசர உதவியாக புதுச்சேரி பட்டாளி மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர் முனைவர் கோ.தன்ராஜ் Ex MP சார்பில் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாநில மற்றும் தொகுதி நிர்வாகிகள் அமைப்பாளரின் ஒத்துழைப்புடன் மீண்டும் இரண்டாம் கட்டமாக ரூ.50000 கதிர்வேல் இல்லம் சென்று அவரின் மனைவி மற்றும் குடும்பத்தாரிடம் அளிக்கப்பட்டது.
கதிர்வேலின் மனைவிக்கு வேலைவாய்ப்பு மற்றும் அவரின் குழந்தைகளுக்கான கல்வியை தொடர அனைத்து விதமான உதவிகளை ஏற்படுத்திதர நடவடிக்கை மேற்க்கொண்டு வருகிறது. அவரின் குடும்பத்திற்க்கு என்றும் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உறுதுணையாக இருப்பார்கள் என்று உறுதி அளித்தார்கள். அபோது மாநில பொறுப்பாளர்கள் கோ.கணபதி, கிருபாநிதி உடனிருந்தனர்.