Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுபானக்கடைகளை திறக்கும் தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

ஜுன் 13, 2021 08:51

திருப்பூர்: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். 

இதன் ஒரு பகுதியாக திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் பாஜக வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல்  தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதுக்கடையை திறக்கும் மாநில அரசை கண்டித்தும், மதுக்கடையை திறக்கக் கூடாது என்று வலியுறுத்தி கையில் பதாகைகளுடன் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர்  KCMB சீனிவாசன், மாவட்ட செயலாளர் கார்த்தி, ராயபுரம் மண்டல் தலைவர் .மூர்த்தி பொதுச் செயலாளர் பூபதிமாவட்ட செயற்குழு உறுப்பினர் கோபிநாத் இளைஞர் அணி மாவட்ட தலைவர் அருண்பிற மொழி பிரிவு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி மற்றும்  மாவட்ட மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்