Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை - தமிழக அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

ஜுன் 14, 2021 10:40

சென்னை: தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாள்தோறும் கொரோனா நோய் தொற்றின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், தற்போது 3-வது அலை தாக்குமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. கொரோனா 3-வது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என யூகங்கள் எழுந்துள்ளன. எனவே, குழந்தைகளை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க பெற்றோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

நோய் தொற்றை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றால், அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி பற்றாக்குறை இல்லாத நிலையை அரசு உருவாக்கி, பல்வேறு இடங்களில் முகாம்களை அமைத்து பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும். மேலும், அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்