Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: இலங்கை குண்டு வெடிப்புக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை' என, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின், மாநில செயலர் முகமது, மாநில துணை தலைவர் அப்துல் ரஹீம், பொருளாளர் அப்துல் ரஹூப் உள்ளிட்ட நிர்வாகிகள் கூறியதாவது.
இலங்கையில், எட்டு இடங்களில் நடந்த, கொடூரமான குண்டு வெடிப்புகளில், 300க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்; 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு காரணமானவர்களை, இலங்கை அரசு கண்டு பிடித்து, தண்டனை வழங்க வேண்டும்.மேலும், இஸ்லாம் மதத்தின் பெயரால், வன்முறையை கையில் எடுப்பதை, நாங்கள் எப்போதும் ஆதரிப்பதில்லை.
இந்த சோக நிகழ்வில், தேசிய தவ்ஹீத் அமைப்புக்கு தொடர்பிருப்பதாக செய்திகள் வருகின்றன. அந்த அமைப்புடனோ, இலங்கையில் செயல்படும், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் அமைப்புடனோ, எங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. இலங்கை குண்டு வெடிப்புக்களில், எங்களையும் தொடர்புபடுத்தி, தமிழகத்தின் மத ஒற்றுமையை குலைக்க, சிலர் நினைக்கின்றனர். எங்களுக்கும், குண்டு வெடிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.