![](admin/uploads/.609e1ac7918933.60310019.jpg)
Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர் நாகேந்திர பிரசாத் 17, மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.ஆண்டிபட்டி சக்கம்பட்டி சீதாராம்தாஸ் நகரை சேர்ந்த பாண்டியன் மகன் நாகேந்திர பிரசாத். ஈரோடு அருகே தனியார் பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு டிப்ளமா படித்தார். விடுமுறையில் ஊருக்கு வந்தார். நேற்றுமுன்தினம் மாலை வீட்டை விட்டு சென்றவர், ஆண்டிபட்டி அறிவுத்திருக்கோயில் அருகே ஒற்றையடிப்பாதையில் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீஸ் மோப்ப நாய் லக்கி சோதனை செய்தது. தடயவியல் துறையினர் தடயங்களை சேகரித்தனர்.ஆண்டிபட்டி இன்ஸ்பெக்டர் பாலகுரு தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.