Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் ஒரே நாளில் 2½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஜுன் 15, 2021 11:27

சென்னை: தமிழகத்தில் நேற்று 2,327 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 701 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

அந்தவகையில் நேற்று இணை நோயுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 68 ஆயிரத்து 734 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 26 ஆயிரத்து 983 முதியவர்களுக்கும், சுகாதாரப்பணியாளர்கள் 853 பேருக்கும், முன்கள பணியாளர்கள் 2,114 பேருக்கும், 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் 1 லட்சத்து 60 ஆயிரத்து 17 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 5 லட்சத்து 97 ஆயிரத்து 418 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்