![](admin/uploads/.60c1ffb50ff837.56116915.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மதுரை: பயணிகளின் வரத்து குறைவாக இருப்பதால் தென்மாவட்ட ரெயில்களை வருகிற 30-ந் தேதி வரை மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
அதன்படி, நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக நள்ளிரவில் கோவைக்கு இயக்கப்படும் ரெயில், பாசஞ்சர் ரெயிலாக இருந்து எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட்ட மதுரை-புனலூர் சிறப்பு ரெயில், சென்னை-கொல்லம் சிறப்பு ரெயில், மதுரை-சென்னை சென்டிரல் குளிரூட்டப்பட்ட ரெயில், சென்னை-நாகர்கோவில், தாம்பரம்-நாகர்கோவில், தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும் மதுரை-சென்னை மகால் எக்ஸ்பிரஸ் ரெயில், மதுரையில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில், தஞ்சாவூர், மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் ராமேசுவரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியன வருகிற 30-ந் தேதி வரை இருமார்க்கங்களிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.