Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பா.ஜ.க. வேட்பாளருக்கு கருப்பு கொடி காட்டிய தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டருக்கு அடி, உதை

ஏப்ரல் 24, 2019 07:31

2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.  இதில் முதற்கட்ட தேர்தல் கடந்த 11ந்தேதியும் மற்றும் 2வது கட்ட தேர்தல் கடந்த 18ந்தேதியும் நடந்து முடிந்துள்ளது. 

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் பிரசாரம், பொது கூட்டம் மற்றும் பேரணி நடத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  இன்று 3வது கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 

மத்திய பிரதேசத்தின் போபால் மக்களவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடுபவர் பிரக்யா சிங் தாக்கூர்.  இவர் தேர்தல் பேரணி ஒன்றில் சென்றபொழுது, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர் கருப்பு கொடி காட்டியுள்ளார் என கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க. தொண்டர்கள் சிலர் போபால் நகரில் உள்ள மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் வைத்து அந்நபரை அடித்து உதைத்தனர்.  இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவரை மீட்டு அங்கிருந்து அழைத்து சென்றனர்.

தலைப்புச்செய்திகள்