Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரள ஆஸ்பத்திரி பிணவறையில் இறந்த பெண்ணின் முகத்தை கடித்து தின்ற எலிகள்

ஜுன் 17, 2021 11:21

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் 3 நாட்களுக்கு முன்பு சுந்தரி (வயது 65) என்ற பெண் இதய கோளாறுக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடலை வைக்க வீட்டில் இடம் இல்லாததால், ஒருநாள் மட்டும் ஆஸ்பத்திரியிலேயே உடலை வைத்திருக்குமாறு அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர். அதன்படி, ஆஸ்பத்திரி பிணவறையில் உடல் வைக்கப்பட்டது.

உடலை பெற குடும்பத்தினர் நேற்று சென்றனர். முகம் மூடப்பட்டு இருந்தது. குடும்பத்தினர் காரணம் கேட்டபோது, முகத்தை எலிகள் கடித்து தின்று விட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், பத்திரிகையாளர்களிடம் முறையிட்டனர்.

தகவல் அறிந்த மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு மாவட்ட மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், மாவட்ட மருத்துவ அதிகாரி, ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று விசாரித்தார். ஆஸ்பத்திரி தரப்பில் தவறு இருப்பதாகவும், இதுபற்றி மந்திரிக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார்.

பின்னர், அந்த உடலை குடும்பத்தினர் தகனம் செய்தனர்.

தலைப்புச்செய்திகள்