Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் புதிய பாதிப்பு சற்று உயர்வு- 24 மணி நேரத்தில் 67,208 பேருக்கு தொற்று

ஜுன் 17, 2021 11:29

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது வைரஸ் பரவல் வெகுவாக குறைந்துள்ளது. குணமடைவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது. பாதிப்பு குறைந்ததையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன.  

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,208 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய நாளை விட சற்று அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பு 2,97,00,313 ஆக உயர்ந்துள்ளது. 

நாடு முழுவதும் ஒரே நாளில் 2,330 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,81,903 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,84,91,670 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,03,570 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 1.29 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 95.93 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 8,26,740 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இது 71 நாட்களுக்கு பிறகு மிக குறைந்த எண்ணிக்கை ஆகும். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 26,55,19,251 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

தலைப்புச்செய்திகள்