Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பூர்: ராகுல் காந்தியின் 51-வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருப்பூர் மும்மூர்த்தி நகர் பகுதியிலுள்ள அகில இந்திய பிரியங்கா ராகுல்காந்தி பேரவை சார்பில் அதன் அலுவலகத்தில் கொரோனா பெரும் தொற்றின் காரணமாக பெற்றோரை இழந்து ஆதரவு இன்றி தவித்த மாணவி நிரஞ்சனாவின் கல்வி பொறுப்பை, பேரவையின் மாநில தலைவர் ஆர்.ஆர். முத்தையன் ஏற்றுக்கொண்டு மாணவியின் வாழ்நாள் படிப்பு செலவிற்கான ஆணையை வழங்கினார்.
தொடர்ந்து ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 2000 முகக் கவசங்கள் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் சமூக இடைவெளியை பின்பற்றி காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.