Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மினிலாரியில் கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்- வாலிபர் கைது

ஜுன் 21, 2021 10:17

மேல்மலையனூர்: மேல்மலையனூர் அருகே ஞானோதயம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் வளத்தி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் போலீஸ்காரர்கள் மனோஜ்குமார், ஷேக் அப்துல்லா, இளவரசன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் மறித்து, மினிலாரியை சோதனை செய்தனர். அப்போது அதில் 30 பெட்டிகளில் போதை பாக்குகளும், 10 பெட்டிகளில் புகையிலை பொருட்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மினிலாரியை ஓட்டிவந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த குள்ளன் மகன் சதீஷ்(வயது 32) என்பதும், பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு புகையிலை பொருட்கள் கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து சதீசை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், மினிலாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தலைப்புச்செய்திகள்