![](admin/uploads/.60d6b5084f91c4.43158767.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருவாரூர்: தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை கூட்டம் இணையவழியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் 22 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக முதல்-மந்திரியின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். இது குறித்து விவாதிக்க அனைத்து கட்சிகள், விவசாயிகள் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். மேகதாது அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்தாமல் மவுனம் காக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து இன்று (திங்கட்கிழமை) தமிழகம் தழுவிய விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். அரசியல் கட்சிகள் விவசாயிகள் அனைவரும் ஒட்டுமொத்த எதிர்ப்பை காட்டும் வகையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.