Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடில்லி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா நிறுத்தப்படலாம் என்பதால் பிரதமர் மோடி வேறு தொகுதிக்கு மாற வாய்ப்பு இருப்பதாகவும், அல்லது அவர் இன்னும் ஒரு தொகுதியிலும் போட்டியிட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதுகுறித்து விளக்கம் அளித்த பாஜ தேசிய தலைவர் அமித்ஷா, ‘‘வாரணாசி தொகுதியில் 26ம் தேதி பிற்பகல் பிரதமர் மோடி தமது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். பிரியங்கா காந்தி போட்டியிட்டாலும், பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் மட்டுமே போட்டியிட்டு அவரை எதிர்கொள்வார். கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்று என்மீது ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். அது ஜோடிக்கப்பட்ட அரசியல் வழக்கு; நீதிமன்றம் எனக்கு சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளது’’ என்றார்.