Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
லடாக் : மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று 3 நாள் பயணமாக லடாக் சென்றார். அவருடன் ராணுவ தளபதி எம்.எம்.நரவானே உடன் சென்றார். லடாக் எல்லையில் உள்ள பி.ஆர்.ஓ எனப்படும் எல்லைச்சாலை கட்டமைப்பு நிறுவனத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் எல்லையோர கட்டமைப்பு பணிகளை ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
மேலும், லடாக் எல்லையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த பின் ராணுவ உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் லடாக்கின் லே பகுதியில் ராணுவ வீரர்களை ராஜ்நாத் சிங் சந்தித்து அவர்களுடன் உரையாடினார். அப்போது, உங்களுக்கு எங்காவது ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதை பகிர்ந்து கொள்வதற்காக ஒரு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது என கூறினார். சீனாவுடன் லடாக் எல்லையில் பிரச்சினை முடிவுக்கு வராத நிலையில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் சுற்றுப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.