Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு பணிகளுக்கு நேர்காணலை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

ஜுன் 29, 2021 11:23

சென்னை:பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி நேற்று தனது ட்விட்டர் பதிவுகளில் கூற்யிருப்பதாவது:

ஆந்திராவில் அனைத்து அரசு பணிகளுக்கும் நடத்தப்பட்டு வந்த நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க சிறப்பான முடிவாகும். தமிழகத்திலும் அரசு பணிகளுக்கான நேர்காணல்களில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், தமிழகத்திலும் அனைத்து நிலை அரசு பணிகளுக்கும் நேர்காணலை ரத்து செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.

எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் அனைத்துப் பணிகளுக்கும் தகுதியானவர்களை தேர்வு செய்வது தான் சரியாக இருக்கும். வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும். முறைகேடுகளைத் தடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்