Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் மரணம்

ஜுலை 03, 2021 10:23

திருச்சி: திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா, துவரங்குறிச்சி அருகே உள்ள வேலக்குறிச்சியைச் சேர்ந்தவர் புலவர் பூ.ம.செங்குட்டுவன் (வயது 78). தி.மு.க.வை சேர்ந்த இவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்தநிலையில் உடல் நலக்குறைவால் நேற்று காலை உயிரிழந்தார். அவரது உடலுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
இன்று காலை 11 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. 1996-ம் ஆண்டு மருங்காபுரி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக பதவி வகித்தார். கட்சியில் ஒன்றியச் செயலாளராகவும் இருந்தார். பின்னர், அ.தி.மு.க.விற்கு சென்ற அவர், மீண்டும் தி.மு.க.விற்கு வந்தார். இவர் அமைச்சராக இருந்த காலத்தில், மருங்காபுரி தொகுதிக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்