![](admin/uploads/.610e6aa89f50c3.93781829.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கடலூர்: கடலூர் மாவட்ட சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் பண்ருட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
லட்சத்தீவு மக்களின் உரிமைகளைப் பறிக்கும் உத்தரவுகளை திரும்பப் பெறவும் மத்திய அரசின் நிர்வாகி பாஜகவை சேர்ந்த பிரபுல் கோட்டா பட்டேலை திரும்பப் பெற வலியுறுத்தியும். காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து ,சட்டபிரிவு 370 உள்ளிட்டு பறிக்கப்பட்ட அனைத்து உரிமைகளையும் மீண்டும் வழங்கிடவும், சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி-யை வாபஸ் பெறவும், நாடு முழுவதும் சிறுபான்மை மக்களை-வழிபாட்டுத்தலங்களை தாக்கி வருவதை கண்டித்தும் மேலும் ஆதிவாசி மக்களின் உரிமைப் போராளி அருட்தந்தை ஸ்டேன் சாமி அவர்கள் விசாரணை கைதியாக மரணமடைவதற்கு காரணமான மோடி அரசை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது.
இதில் சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் உதயகுமார், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ஷேக் நூர்தீன், அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஸ்டார் சவுக்கத் அலி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் சங்கரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எஸ் கே ஏழுமலை, மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பாளர் ஜீவானந்தம், தொழிற்சங்க கூட்டமைப்பு செயலாளர் ராஜேந்திரன்,சிபிஎம் நகர செயலாளர் உத்தராபதி ,ஆட்டோ சங்கத்தலைவர் நிசார் அகமது, வாலிபர் சங்க நகர செயலாளர் சங்கர்,தொலைத்தொடர்பு மு.நிர்வாகி ஜெயராமுலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.