![](admin/uploads/.61052741c8ae06.34868770.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மும்பை: கண் பார்வையை இழந்திருந்த மூதாட்டி, கோவிட் தடுப்பூசி போட்டப்பிறகு பார்வையை பெற்றுள்ள அதிசயம் மஹாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது.
கோவிட் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி செலுத்தும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனாலும், கோவிட் தடுப்பூசி பற்றி பல தவறான கருத்துகள் மக்களிடையே பரவி வருகின்றன. தவறான தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டது. கோவிட் 2வது அலை ஏற்படுத்திய பாதிப்பால், பலரும் தடுப்பூசி செலுத்த ஆர்வம் கொண்டுள்ளனர். சில பொதுவான பக்கவிளைவுகள் சிலருக்கு ஏற்பட்டிருந்தாலும், வேறு எந்தவித பாதிப்பையும் தடுப்பூசியால் ஏற்படுவதில்லை.
அப்படியிருக்கையில், கண்பார்வை இழந்த ஒரு மூதாட்டி கோவிட் தடுப்பூசி போட்டப்பிறகு பார்வையை பெற்றுள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது. மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 70 வயதான மூதாட்டி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கண்புரை ஏற்பட்டு இரு கண் பார்வையையும் இழந்துள்ளார். கோவிட் தொற்றுக்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக்கொண்ட அவர், தற்போது கண் பார்வை ஓரளவு மீண்டும் கிடைத்துள்ளதாக கூறியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.