Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில்  கடத்தப்பட்ட பெண் குழந்தை திருப்பதியில் மீட்பு:  வாலிபர் கைது

ஜுலை 08, 2021 04:06

சென்னை: சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணமாகி, கணவரை விட்டு பிரிந்து தனது 2 குழந்தைளுடன் முகப்பேரில் வசித்து வருகிறார்.

2-வது மனைவிக்கு சதீஷ்குமார் உள்பட 3 மகன்கள் உள்ளனர். கடந்த 5-ந் தேதி நள்ளிரவு தனது சகோதரியின் வீட்டுக்கு சென்ற சதீஷ்குமார், அவருடன் தகராறு செய்தார். பின்னர் சகோதரியின் கண் எதிரேயே அவருடைய 3 வயது மகளை இருசக்கர வாகனத்தில் கடத்திச்சென்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக ஜெ.ஜெ.நகர் போலீசார் சதீஷ்குமார் செல்போன் எண்ணை வைத்து நடத்திய விசாரணையில் அவர் குழந்தையுடன் திருப்பதியில் பதுங்கி இருப்பது தெரிந்தது. அங்கு சென்று சதீஷ்குமாரை கைது செய்த போலீசார், 3 வயது குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சதீஷ்குமாருக்கும், அவருடைய சகோதரிக்கும் முறை தவறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனாலேயே அந்த பெண்ணின் கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.

இதற்கிடையில் அவரது சகோதரிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்து வந்தது. இதனால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், சகோதரியின் குழந்தையை கடத்திச் சென்றால் தானாக தன்னை தேடி வந்துவிடுவார் என கருதி குழந்தையை கடத்திச்சென்றது தெரியவந்தது.

திருப்பதியில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட சதீஷ்குமார் மீது கடத்தல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.
 

தலைப்புச்செய்திகள்