![](admin/uploads/.5d5b7029b57c59.45301145.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. வேதாரண்யம் தாலுக்கா ஆயக்காரன்புலத்தில் பழங்குடி மக்களின் சமூக போராளி ஸ்டோன் சுவாமியை சிறையிலடைத்து மரணமடைந்த செய்திக்காக மத்திய அரசை கண்டித்தும்,ஆனந்த்டெல்தும்டே உள்ளிட்டவர்களை விடுதலை செய்யக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி தலைமை வகித்தார்
ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர் கோவை சுப்பிரமணியன் விளக்க உரை ஆற்றினார் ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர் வெற்றியழகன். விவசாய சங்க ஒன்றிய தலைவர் பன்னீர்செல்வம். ஒன்றிய குழு உறுப்பினர் தங்கராசு. விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் இளையபெருமாள், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் வெண்சங்கு மற்றும் வெற்றிச்செல்வி விடுதலை சிறுத்தை தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர் ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்