![](admin/uploads/.5cf79ff5363865.39351734.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பலத்த காற்று இடி கூடிய மழை பெய்தது. அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக இரவு 8 மணி நேரம் மின்தடை ஏற்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் மரங்கள் சாய்ந்தன. நீண்ட நேரம் வாகனங்கள் நின்று கொண்டிருந்தது. வாகன ஓட்டுனர்கள் தூக்கமில்லாமல் அவதிக்கு ஆளானார்கள். கச்சராபாளையம், சங்கராபுரம், ரிஷிவந்தியம், தியகதுருகம், உளுந்தூர்பேட்டை, ஆசனூர், நிறைமதி, நீலமங்கலம் நகர் பகுதியில் பலத்த மழையுடன் காற்றும் வீசியது. இதனால் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளார்கள்.