Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மணிப்பூரில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஜுலை 09, 2021 12:26

இம்பால்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் நிலநடுக்கமானது உணரப்பட்டது. 

நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்தத் தகவலும் இல்லை.  கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்