Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாவால் உயிரிழந்த விவசாயிகளின் வேளான் கடன் தள்ளுபடி: கர்நாடக அரசு அறிவிப்பு

ஜுலை 15, 2021 01:13

பெங்களூரு: கோவிட் தொற்றால் உயிரிழந்த விவசாயிகள் பெற்றுள்ள வேளாண் கடன்களை தள்ளுபடி செய்வதாக கர்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கர்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சர் சோமசேகர் தெரிவித்து உள்ளதாவது: குடும்பத்துக்காக பணிக்கு சென்று சம்பாதித்த தாய், தந்தை உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் தொற்றுக்கு பலியானதால் ஒட்டுமொத்த குடும்பமும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவ கர்நாடகாவில் பிபிஎல் அட்டைதாரர் (வறுமை கோட்டுக்கு கீழே வாழ்வோருக்கான ரேஷன் அட்டை) குடும்பத்தில் தொற்றுக்கு பலியானோருக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்குவதாக முதல்வர் எடியூரப்பா ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

கோவிட் வைரஸ் தொற்றால் விவசாயிகளும் கூலி தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கோவிட் தொற்றால் பலியான விவசாயிகள் பெற்றுள்ள வேளான் கடன்களை தள்ளுபடி செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. கர்நாடகாவில் 2020 - 21 ஆம் நிதி ஆண்டில் 25.67 லட்சம் விவசாயிகள் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் ரூ.17 ஆயிரத்து 108 கோடி கடன் வாங்கியுள்ளனர். இதில் கடன் பெற்ற விவசாயிகளில் 10,187 பேர் தொற்றினால் உயிரிழந்து உள்ளனர். எனவே அவர்களின் குடும்பத்தின் நிதி சுமையை குறைக்கும் வகையில் இறந்த விவசாயிகள் பெற்ற ரூ.79.47 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்