![](admin/uploads/.5ebd83e3cb4780.13756593.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மதுரை: மதுரை தனக்கன்குளம் பி.ஆர்.சி காலனியைச் சேர்ந்தவர் காமராஜ் (வயது 67). அரசு போக்குவரத்து கழகத்தில் டிப்போ மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு புறப்பட்டுச் சென்றார். மர்ம நபர்கள் இந்த வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ. 39 ஆயிரத்து 700, 7 பவுன் தங்க நகை, 500 கிராம் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
வெளியூரில் இருந்து வீடு திரும்பிய காமராஜ் வீட்டின் ஜன்னல் கதவு உடைந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் பதறியடித்துக்கொண்டு வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த பணம் ரூ.39,700, 7 பவுன் தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து திருநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அனுஷா மனோகரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.