Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிப்பது யார்?: ஜூன் 6ல் இறுதி விசாரணை

ஏப்ரல் 25, 2019 09:19

சென்னை: ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் இறுதி விசாரணை வரும் ஜூன் 6-ம் தேதி தொடங்க உள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க, தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி அதிமுக உறுப்பினர்கள் புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்கள் தங்கள் மனுவில், ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமை ஜெ.தீபா, தீபக் ஆகியோருக்கு கிடையாது என கூறியுள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்