Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி(53). இவர், பாஜக பெரம்பூர் கிழக்குப் பகுதி வழக்கறிஞர் பிரிவு தலைவராக பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில், அந்தப் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், அவரது 15 வயது மகளுக்கும் பார்த்தசாரதி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்த சிறுமியும், பெண்ணும் சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவாலிடம் புகார் தெரிவித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு கொடுங்கையூர் போலீஸாருக்கு ஆணையர் உத்தரவிட்டார்.