![](admin/uploads/.5ce8ef4eb31069.25034535.gif)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள வடக்கு நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 63). இவர் மைக்செட், சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்தவர் வள்ளிமுத்து (45). இவரும் அதே தொழில் செய்து வந்ததால் இருவருக்குமிடையே அடிக்கடி மோதல் இருந்து வந்தது.
தொழில் போட்டி காரணமாக அதே ஊரில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு இருவரும் பங்கு போட்டு தகராறு செய்து வந்தனர். இதன் காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்படுவது உண்டு. நேற்று பாலசுப்பிரமணியன் வீட்டிற்கு முன்பாக உள்ள தள்ளுவண்டியில் படுத்திருந்தார். சிறிது நேரம் கழித்து அந்த வழியே சென்றவர்கள் தள்ளுவண்டியில் பாலசுப்பிரமணியன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பரளச்சி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பாலசுப்பிரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலையாளி யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதில் முன் விரோதம் காரணமாக வள்ளிமுத்து தான் கடப்பாரையால் தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.