Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை

ஜுலை 18, 2021 03:48

மும்பை: தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து மும்பையில் பலத்த மழை பெய்து வருகிறது. அனைத்து சாலைகளிலும் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது.

மும்பையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை கனமழை கொட்டியது. மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் சாலைகளில் தேங்கிய நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது. 

நகரின் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள்ளேயும் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு ஆளாகினர். மும்பை விக்ரோலி பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். 

தலைப்புச்செய்திகள்