Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொது வினியோக திட்டத்திற்காக திருவாரூரிலிருந்து 2,500 டன் அரிசி ரயில் மூலம் அனுப்பி வைப்பு

ஜுலை 22, 2021 12:35

திருவாரூர்: திருவாரூரிலிருந்து பொது வினியோக திட்டத்திற்காக விருத்தாசலத்திற்கு 2,500 டன் அரிசி ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி அரிசி மூட்டைகளாக தயாரானது. இந்த அரிசி மூட்டைகள் பொதுவினியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. 

அதன்படி திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரயில் நிலையம் கொண்டு வரப்பட்டன. அங்கு லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் சரக்கு ரயில் பெட்டிகளில் ஏற்றினர். பின்னர் 42 பெட்டிகளில் ஏற்றப்பட்ட 2,500 டன் அரிசி பொதுவினியோக திட்டத்திற்காக விருத்தாசலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்