![](admin/uploads/.60599a952b14e6.65860188.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கோவை: கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட பூராண்டம்பாளையம் பரமேஸ்வரி என்பவர் வீட்டில் கடந்த 05.07.2021 ஆம் தேதி காலை சுமார் 09.30 மணிக்கு மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 18பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்றனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து வட்ட காவல் ஆய்வாளர் திரு.S.முருகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சார்பு ஆய்வாளர்கள் திரு.பாண்டியராஜன், குப்புராஜ் மற்றும் தலைமை காவலர் மகாராஜன் மு.நி.காவலர்கள். பிரபாகரன், பிரபு காவலர்கள் பழனிகுமார், பாவேந்தன்,கேசவன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் திவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் செலக்கரசல் அருகில் வாகன தணிக்கை செய்தபோது சந்தேகப்படும் படியாக இருசக்கரத்தில் வந்த ஆண், பெண் இருவரை விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களை காவல் நிலையம் அழைத்து விசாரித்த போது அவர்கள் பெயர் ராமு மற்றும் இந்திராணி என்று தெரியவந்தது. மேலும் அவர்களை தொடர்ந்து விசாரித்த போது மேற்படி நகை பணம் திருடியதை ஒப்புக்கொண்டனர்.
இதை தொடர்ந்து அவர்களிடமிருந்து 13பவுன் நகை மற்றும் ரூ.52000 பணம் மீட்கப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். இதனை பாராட்டி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.