![](admin/uploads/.5fe46c65a2a1c4.28074605.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராமநாதபுரம்: ராமநாதபுரம்பாரதி நகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்த எலி ஒன்றை, நாயொன்று வாயில் கவ்விக் கொண்டு ஓடியது. பின்னர் நாய் அப்பகுதியில் ஈரமாக இருந்த இடத்தில் வாயாலும், காலாலும் குழி தோண்டியது. அதனையடுத்து தோண்டிய குழியில் எலியை போட்டு மூடியது. ஐந்து அறிவு ஜீவனான நாய் இறந்த எலியை குழி தோண்டி அடக்கம் செய்யும் அபூர்வ காட்சி அங்கிருந்தவர்களை வியப்பூட்டியது.