Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கூடுதலாக ஆவின் பாலகம் அமைக்க கோரிக்கை

ஜுலை 23, 2021 04:12

அவிநாசி: பொதுமக்களின் தினசரி பயன்பாட்டில் முக்கிய அங்கமாகிவிட்ட பால் பயன்பாட்டில் ஆவின் பாலுக்கு மவுசு அதிகம். ஆனால் அவிநாசி நகர் மற்றும் கிராமப்புறங்களில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நகரின் மத்தியில் ஓரிரு ஆவின் பாலகங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் புறநகர் பகுதியில் ஆவின் பால் கிடைப்பதில்லை.

இதனால் தனியார் பால் வியாபாரம் செய்யும் சிலர் ஆவின் பாலகங்களில் இருந்து குறைந்தளவு பால் பாக்கெட்டுகளை வாங்கி கூடுதல் விலை வைத்து விற்கின்றனர். இதனால், அரசின் பால் விலை குறைப்பு மக்களுக்கு பலன் தரவில்லை. எனவே மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ‘ஆவின்’ நிறுவனம் மூலம் நேரடி பால் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்