![](admin/uploads/.60e6e0f1cec241.65174275.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுங்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
கோவை வடக்கு மண்டலம் வார்டு எண்கள் 26 27 42 43 44 சுகாதார ஆய்வாளர் முருகா, கிழக்கு மண்டல சுகாதார ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்ட சுகாதார அலுவலர் திருமால் மத்திய மண்டல சுகாதார அலுவலராக பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்பாக பிரதான அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு மண்டலம் வார்டு எண்கள் 11 12 13 14 சுகாதார ஆய்வாளர் சண்முகநாதன் மேற்கு மண்டல சுகாதார அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார். 3 சுகாதார ஆய்வாளர்கள் மண்டல அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ள நிலையில், அவர்கள் பணியாற்றி வந்த வார்டுகளுக்கு கூடுதல் பொறுப்பில் சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி சுகாதார ஆய்வாளர்கள் மணிவண்ணன், தனபால், ஜாகிர் உசேன், முருகன், குணசேகரன், ஆகியோர் கூடுதலாக கவனிப்பார். மேலும் கிழக்கு மண்டல சுகாதார அலுவலர் சந்திரன் மத்திய மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மேற்கு மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் ஆகியோர் தங்களின் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.