Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திடீர் நெஞ்சுவலி: மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அட்மிட்

ஜுலை 25, 2021 11:35

சென்னை: நெஞ்சு வலி காரணமாக, சிவசங்கர் பாபா, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை, கேளம்பாக்கம்அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள, 'சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல்' பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, 73. இவர் மீது, மூன்று மாணவியர் பாலியல் புகார் அளித்தனர். அதனால், 'போக்சோ' உள்ளிட்ட சில பிரிவுகளில், இரு வழக்குகள் பதியப்பட்டன.சி.பி.சி.ஐ.டி., போலீசார், சிவசங்கர் பாபாவை கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், புழல் சிறையில் இருந்த சிவசங்கர் பாபாவிற்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.அவரது உடல்நிலை குறித்து, டாக்டர்கள் கூறுகையில், 'வயது மூப்பின் காரணமாக, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. தற்போது நலமுடன் உள்ளார். அவருக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன. உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்' என்றனர்.

தலைப்புச்செய்திகள்