Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: டெல்லியில் நாளை முதல் தியேட்டர்கள், 'ஸ்பா' உள்ளிட்டவற்றை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
டெவல்லியில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. எனினும் கடந்த சில வாரங்களாக வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதிய தளர்வுகளை டெல்லி அரசு நேற்று அறிவித்தது. இந்த புதிய தளர்வுகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதை கருத்தில் வைத்து புதிய தளர்வுகளை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி நாளை முதல் இந்த புதிய தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. காலை 5:00 மணி முதல், தியேட்டர்கள், ஸ்பா உள்ளிட்டவை 50 சதவீதம் பேருடன் செயல்பட அனுமதிக்கப் படுகிறது.மெட்ரோ ரயில்களை 100 சதவீத பயணியருடன் இயக்கலாம். சந்தைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை காலை 10:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை இயங்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.