Sunday, 29th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சிவகங்கையில் மது அருந்தியவர்களை தட்டிக் கேட்ட மருத்துவக் கல்லூரி மாணவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகே முத்து நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் இருதயராஜ்(60). இவரது மகன்கள் ஜோசப்(25), கிறிஸ் டோபர்(22). இவர்கள் பிலிப்பைன் சில் எம்பிபிஎஸ் படிக்கின்றனர். தற்போது கரோனா தொற்று காரணமாக சொந்த ஊரிலேயே தங்கி ஆன்லைன் மூலம் படித்து வந்தனர்.
இவர்களுக்குச் சொந்தமான தோட்டம் அண்ணாமலை நகரில் உள்ளது. இங்கு 7 பேர் கொண்ட கும்பல் நேற்று மது அருந்தினர். இதை இருதயராஜ், ஜோசப், கிறிஸ்டோபர் ஆகியோர் தட்டிக் கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அக்கும்பல், தாங்கள் வைத்திருந்த கத்தியால் மூன்று பேரையும் குத்தினர். இதில் கிறிஸ்டோபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காயமடைந்த மற்ற இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், டிஎஸ்பி பால்பாண்டி, சிவகங்கை டவுன் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். தப்பி யோடிய கும்பலை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன.
இக்கொலை தொடர்பாக கீழவாணியங்குடியைச் சேர்ந்த மருதுபாண்டி (21), சிவகங்கை நேருபஜாரைச் சேர்ந்த நந்தகுமார் (20) ஆகிய இருவரை கைது செய்தனர்.