Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் பலி

ஜுலை 27, 2021 03:06

போபால்: மத்தியபிரதேச மாநிலம் மன்ட்சார் பாபர்ஸ் காக்ராய் என்ற கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்த பலர் திடீரென மயங்கி விழுந்தனர்.

அவர்களை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே 3 பேர் இறந்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி 3 பேர் இறந்தனர்.

மேலும் கள்ளச்சாராயம் குடித்த 10-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில்  சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சாராயத்தை விற்ற நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

தலைப்புச்செய்திகள்