Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நூலகங்கள் திறப்பால் வாசகர்கள் மகிழ்ச்சி

ஜுலை 27, 2021 03:27

திருப்பூர்: ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட நூலகங்கள் சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் பார்க் ரோட்டில் உள்ள மாவட்ட மைய நூலகம், குமார்நகர் கிளை  நூலகம் காலை 9 மணி முதல் செயல்பட தொடங்கியுள்ளது.

அதே போன்று நகராட்சி, ஊராட்சிகளில் உள்ள கிராமப்புற நூலகங்களும் செயல்படுகின்றன. இதனால் வாசகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து நூலகர்கள் கூறுகையில், மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது. ஏற்கனவே உறுப்பினராக உள்ளவர்கள் புத்தகங்களை எடுத்துக்கொள்ளலாம். 

செய்தித்தாள், புத்தகம் அமர்ந்து படிக்க அனுமதிப்பது குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. வாரத்தின் வெள்ளிக்கிழமை தவிர இதர 6 நாட்களும் காலை 10 மணிமுதல் இரவு 7மணி வரை நூலகங்கள் செயல்படும் என்றனர்.

தலைப்புச்செய்திகள்