![](admin/uploads/.605d7350a5d4b3.99496868.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுக-வில் இருந்து திமுக-வுக்கு சென்ற செந்தில் பாலாஜி தற்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக உள்ளார். இவர் ஏற்கனவே, அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க அமைச்சர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அமைச்சர் என்பதால் சலுகை வழங்க முடியாது. ஆகஸ்ட் 6-ம் தேதி ஆஜராக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.