Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்

ஜுலை 27, 2021 04:08

திருப்பூர்: அரசு அலுவலகம்,உள்ளாட்சி அலுவலகம், பொதுத்துறை நிறுவனங்களில் அரசு ஊழியர்கள் தங்களது பணியை செய்ய லஞ்சம் கேட்டால் புகார் செய்யலாம் என தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். எனவே திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி., தட்சிணாமூர்த்தி (94981 09718), இன்ஸ்பெக்டர் வினோதினி (94981 74646) ஆகியோரையும், 0421 2482816, 94435 49890 என்ற எண்ணில் அலுவலகத்தையும் தொடர்புகொண்டு புகார் செய்யலாம்.

மேலும், dsptprdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகார் செய்யலாம் என ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அறிவித்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்